Wednesday, October 20, 2010

Wednesday, September 8, 2010

வசனமா? விசனமா?

"வேதம் உன்னைப் பாவத்திலிருந்து காக்கும்.அல்லது பாவம் உன்னை வேதத்தில் இருந்து காக்கும்." ஆம், நாம் வேதத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்தையும்,நேரத்தையும் கொடுக்காத போது, நாம் பாவத்தில் விழும் வாய்ப்புகள் அதிகம். "நான் பாவம் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" என, மிக மிக அலுவலான தாவீது ராஜா எழுதி வைத்திருக்கிறார் நூற்றுப் பததொனபதாம் சங்கீதம் பதினோராவது வசனத்தில்.

Contact

You can contact me at pjebaraj@yahoo.com

Tuesday, September 7, 2010

நலந்தரும் அரட்டையா?

அரட்டை - ஆனந்தமா? ஆபத்தா?

நலந்தரும் அரட்டையா?

'சும்மா' என்ற வார்த்தை, தமிழில் சும்மா சும்மா வருகிறது. நண்பனிடம் என்ன பேசினாய்? 'சும்மா பேசினேன்!' சிநேகிதியின் போன் காலில் என்ன செய்தி ? 'சும்மா பேசினேன்!' (சும்மா கதையளக்காதே, விசயத்துக்கு வா என நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது )

கல்லூரி வளாகங்களில் அரட்டைக் கச்சேரிக்கேன்றே சில இடங்களும், பல நபர்களும் உண்டு. கேண்டீனிலும், மரத்தடியிலும்,பூங்காவின் ஓரமான பகுதிகளிலும் மாணவரும் மாணவியரும் கூடிக் கூடிப் பேசுவது சாதாரணக் காட்சிகள். ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் எனபது தான் முக்கியம். பாடங்களைப் பற்றிப் பேசும் மாணவர்களைப் புத்தகப் புழு என்று ஒதுக்கிவிடுவார்கள். பக்தி, கடவுள் என வாயெடுத்தால், சாமியார் பட்டம் கட்டி விடுவார்கள். அப்படிஎன்றால், அவர்கள் என்னத்தைப் பேசுகிறார்கள்?

அந்த வாரத்தில் ரிலீஸ் ஆன படம் தான் முக்கியமான விவாதமாக இருக்கும். அப்புறம், "அந்தப் பையனும் அவளும்" என்று ஆரம்பித்து, வகுப்பின் எல்லா மாணவர்க்கும் ஜோடி சேர்ப்பது அவர்களின் அக்கறையாயிருக்கும். வாத்தியார், டீச்சர், இவர்களைப் பற்றிய வம்புகளும், விகற்பமான கமெண்டுகளும் தாராளமாகவே வரும். இன்னும் கொஞ்சம் டிசென்ட் கூட்டமானால், சானியா, டோனி, என விளையாட்டுகளைப் பற்றிப் பேசுவார்கள். அல்லது, நமது அரசியலை ஒரு அலசு அலசுவார்கள்.

கல்லூரி இடைவேளைகளிலும், விடுதிகளிலும், மாணவர் பல காரியங்களைப் பற்றிப் பேசுவது நல்லதுதான். நாம் எந்திரப் பொம்மைகள் அல்ல. நமக்கும் உணர்வுகள் உண்டு. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி நாம் பேசத்தான் வேண்டும். ஆனால், நமது பேச்சுக்களில் கட்டுப்பாடு வேண்டும். இல்லாவிடில், நாம் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

வள்ளுவர் சொல்கிறார்,
"யாகாவாராயினும், நாகாக்க, காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
- ஆம், நாம் மற்ற எதையும் காக்காமல் இருந்தாலும், நாவை - நமது பேச்சுக்களைக் காக்க வேண்டும். இல்லாவிடில், நமது வார்த்தைகளில் பிடிபட்டு, சோகத்தை நாம் அடைவோம்.
"மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் பலனைப் புசிப்பார்கள்" - நீதி 18 :21 .

ஆண்டவரின் பிள்ளைகளாக நாம் பிற மாணவர்களோடு நட்பு வைப்பது அவசியம். அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களைப் பற்றி அவர்களுடன் பேசுவதில் தப்பில்லை. படிப்பு, விளையாட்டு, நாட்டு நடப்பு, சமுதாயப் பிரச்சனைகள், இப்படி பல நல்ல காரியங்களைப் பற்றி நாம் பேச வேண்டும். ஆனால், ஆனால், நம்மைக் கறைப்படுத்தும் விசயங்களைப் பற்றி நாம் பேசி, நமது ஆன்ம வாழ்வினைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

சங்கீதம் ஒன்று: ஒன்று நமக்கு நல்ல வழிகாட்டி. எங்கு நாம் நடக்க, நிற்க, உட்காரக் கூடாது என்று தெளிவாய் இது சொல்கிறது. மற்றவர்களோடு நமக்கு உள்ள உறவு, "பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்" எனபது போல, அவர்களை நல்வழிப் படுத்துகிறதாக இருக்க வேண்டும். மாறாக, நமது அர்த்தமற்ற அரட்டைகள் நம் வாழ்வை "பன்றியோடு சேர்ந்த கன்றின்" கதையாக்கிவிடக் கூடாது. .

P ஜெபராஜ், UESI ஊழியர், சென்னை

Wednesday, August 25, 2010

Thiyaanam

தியானமா, சூன்யமா?


உலகில் பல பல தியானங்கள் நடக்கின்றன.பெரிய பெரிய கம்ப்யூட்டர் கம்பனிகளிலும், வேலை திறனைக் கூட்ட தியானத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகமாக தியானங்கள் செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள். பெரும் பணக்காரர்களும் அமைதியைத் தேடி தியானம் செய்கிறார்கள். பிரபலமான சினிமா நடிகர்களும் தங்கள் பிஸி வாழ்க்கையை விட்டு தியானம் செய்யப் போகிறார்கள். இந்த நாட்டத்தைப் பயன்படுத்தி,பல நவீன குருக்களும் தியான சாலைகளும் அதிகமான பணத்தையும் வசூல் செய்கிறார்கள்.

நம்முடைய சமுதாயம் ஓடிக்கொண்டே இருக்கும் மக்களைக் கொண்டது. விடிவு முதல் அடைதல் வரை ஒரே ஓட்டம் தான். தொடர்ந்து அலுவலாகவும், பதட்டத்தோடும் இருப்பது நம் உடலைப் பாதித்து, பல நோய்களைக் கொண்டு வருகிறது. பதட்டத்தை விட்டு விட தியானம் மருந்தாகக் கூறப் படுகிறது.


அலசடிப் படுகின்ற மனத்தை கட்டுப்பாடுக்குக் கொண்டுவர தியானம் அவசியம் எனபது எல்லோருக்கும் தெரிகிறது. மனதின் சிந்தனைகளை எல்லாம் கட்டுப்படுத்தி, தேவையில்லாத, நம்மைக் கறைப்படுத்துகிற நினைவுகளை அப்புறப்பபடுத்தி, நிர்மலமான் மனதை அடைவது தியானமாகும்.

மனதை சூன்யமாக்க முயற்சிப்பது இயலாத காரியம். இது நல்ல பழக்கமும் கிடையாது. பல தியான பயிற்சிகளில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட வார்த்தையையோ, பொருளையோ,மனத்தில் கொண்டுவந்து, அதில் முழுக் கவனம் செலுத்தும் படி சொல்லப்படுகிறார்கள். ஆனால், அர்த்தமில்லாத வார்த்தைகளையோ, பொருளையோ, நாம் தியானத்திற்கான மையமாய் வைக்கும் போது, நாம் தேவையில்லாத வலைகளில் மாட்டிக்கொள்ள முடியும்.


வெறுமையாய் இருந்த ஒருவனின் வாழ்க்கையில் அவனை விட்டுப் போன அசுத்த ஆவி தன்னிலும் பொல்லாத ஏழு ஆவிகளைக் கூடிவந்து, குடியிருந்ததாம்- லூக்கா 11 : 23 - 26 .ஆம்.நம் மனது வெறுமையாக இருக்கும் என்றால் அதனை பிசாசு பிடித்துக்கொள்வான். An idle mind is the devil 's workshop எனபது பழமொழி.

'கிறிஸ்தவ தியானம்' என்றால் என்ன?

கிறிஸ்தவ தியானம் எனபது, தேவனின் வசனத்தைத் திரும்பத் திரும்பத் வாசித்து, அதன் அர்த்தத்தை யோசித்து, அதின் பல்வகை உண்மைகளை ஆண்டவர் நமக்கு வெளிப்படுத்த, அவற்றை நம் சொந்தமாக்கிக் கொள்ளும் அனுபவமாகும்.
ஆண்டவரின் பிள்ளைகளான நாம் அவரின் வேதத்தை தியானிக்க வேண்டும். ஆண்டவரின் பிரசன்னத்தை நாடி, அதில் நாம் பிரியப்பட வேண்டும்.

ஏனோக்கு தேவனோடு எப்போதும் இருந்ததினால் அவரால் எடுதுகொள்ளப்பட்டார் - ஆதி 5 : 24 . தியானத்தை தன் வழக்கமாகக் கொண்டிருந்த ஈசாக்கு நல்ல மனைவியைக் கண்டடைந்தான் - ஆதி 24 : 63 . நாற்பது நாள் ஆண்டவரின் பிரசன்னத்தில் திளைத்து இருந்த மோசே அருமையான கற்பனைகளைப் பெற்றுக்கொண்டார் - யாத் 24 :18 .கர்த்தரின் வசனத்தை இரவும் பகலும் தியானித்த யோசுவா அருமையான தலைவரானார் - யோசுவா 1 : 8 .நாட்டை ஆண்ட தாவீது ராஜா, தேவையில்லாதவற்றை நாம் தவிர்த்து, கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கச் சொல்கிறார் - சங்கீதம் 1 :2 .

நாம் வேதத்தை தியானம் செய்யும் முன்பாக சற்று நம் மனதை ஒருமுகப் படுத்த வேண்டும். நம் மனதில் உள்ள கவலைகளை ஆண்டவரிடம் சொல்லி, அவரின் சமாதானத்தினால் நிறையப்பட வேண்டும் - பிலி 4 :6 ,7 .தியான வாழ்வுக்கு ஏசுவே நம் முன்மாதிரி - மாற்கு 1 :35 . இந்த வசனத்தில் இயேசு தன் ஜெபத்திற்கு தெரிந்துகொண்ட நேரம் மற்றும் இடம் பற்றிப் பார்க்கிறோம். நாம் நன்கு விழிப்பாக இருக்கக் கூடிய நேரத்தை தியானத்திற்கு தெரிந்து எடுக்க வேண்டும். நம் சிந்தனைகளை சிதறப் பண்ணாத ஒரு இடத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வாஞ்சையோடு ஆண்டவரின் வசனத்தை வாசித்து தியானம் பண்ண வேண்டும். ஆண்டவர் நமக்கு வெளிப் படுத்தும் புதிய உண்மைகளை எழுதி வைப்பது நல்லது. அந்த உண்மைகளை நம் வாழ்வில் நடைமுறைப் படுத்தி, பின் அதை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் - எஸ்றா 7 :10

நாம் நம் அனுதின வாழ்வினை தேவனின் வசன தியானத்தோடு துவங்கி,, தியானத்தோடு முடிப்போமானால், நாம் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் உற்சாகமான வாழ்வு நடத்துவோம்.நம் படிப்பை / வேலையை நன்றாகச் செய்வோம். நமக்கும் பிறருக்கும் பயனான வாழ்வை நடைமுறைப் படுத்தி, பிறருக்கும் அறிமுகம் செய்வோம்.

P . ஜெபராஜ், UESI ஊழியர், சென்னை.

தியானம்

தியானத் தொர்பு இருக்கிறதா?

அவசரமாக கிளம்புவதற்காக சட்டையை 'அயர்ன்' பண்ணிக் கொண்டு இருந்தேன். திடீரென, சூடு குறைந்து, சட்டையின் கசங்கல்கள் அப்படியே இருந்தது. ஏன் என்று பார்த்தால், நான் தெரியாமல் வயரை அசைததில், 'அயர்ன்' வயர் தொடர்பு போயிருந்தது. அதைச் சரி செய்து, என் வேலையை முடித்தேன்.

ஆண்டவர் என்னோடு பேசினார், "நீயும் என்னோடு உள்ள தொடர்பைத் தவற விட்டு விட்டால், அனலில்லாமல் இருப்பாய். வாழ்வின் கசங்கல்கள் அப்படியே இருக்கும். உன் உள்ளே உள்ள சுருக்கங்கள் வெளிஉலகுக்கும் தெரியவரும். செயலில், உறவுகளில், குளிர்ந்து இருப்பாய். உன்னால் பிறருக்கு ஆண்டவரின் அனலைக் கொடுக்க முடியாது.என்னோடு உள்ள உன் தொடர்பு நிலைத்ததாய் இருக்கட்டும்".

ஆண்டவரோடு நம் தொடர்பு எப்படி இருக்கிறது? இரவும் பகலும் நாம் அவரைத் தியானிக்கிறோமா? அவரில் நாம் கொள்ளும் தியானம் நம்மில் அனலைத் தந்து, நாம் பிறருக்கு அனலைக் கொடுக்கவும் உதவும்.

P . ஜெபராஜ், UESI ஊழியர், சென்னை.

Tuesday, July 27, 2010

Profile of Mr. P. Jebaraj - Sasi

Profile of Mr. P. Jebaraj - he is ministering among the University Students from 1976 after his Master’s in English Literature. 

Initially he was with IEHC’s University Ministry Department and joined with UESI – Union of Evangelical Students of India from May 1979. 

He has done his B.D. from Serampore University as an external student. He has played different roles in UESI, as a Field Staff, Administrative Secretary, Evangelism Secretary, Training Secretary, Secretary for 2 Departments – “Church Relations” and “Christian Ethics & Social Concerns”, Zonal Secretary for South India,  Zonal Secretary for East India,  General Secretary and NEGF Secretary. As family they were in Orissa for 5 years. 

 P.Jebaraj is gifted in writing in English and Tamil and his articles appear in ‘Light of Life’ and ‘Tharisana Sudar’ often. 

He is a member of CSI St. Mark's Church, Selyur, Chennai 73 and a Lay Preacher of CSI Chennai Diocese from1978. 

 Mrs. Sasi Jebaraj a accepted Christ during her college days. She is involved in counseling students, especially those from other faiths. 

She has done her Diploma in Pharmacy and M.A. in English Literature. She was ministering to students of MMC – Madras Medical College regularly. She is also a Prayer Warrior of ‘Jesus Calls’ ministry, helping in theer Tower. 

After the riots against Christians in Kandhamal, Orissa, she has visited Kandhamal 5 times, helping in the Trauma Counseling of MUT – Missionaries Upholders Trust and visiting the villages, meeting the victims personally as she is fluent in Oriya language. 

She was NEGF Secretary and then Staff to develop graduates ministry in East India.

P Jebaraj and Sasi Jebaraj retired from UESI and ministers to Churches,  students and graduates groups .

Jebarajes are blessed with 3 daughters. All of them know the Lord and as families are involved in the ministry in various 

pjebarajuesi@gmail.com 

http://jesimusings.blogspot.com/